Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




கடைசி நாட்களின் அடையாளங்கள்

SIGNS OF THE LAST DAYS
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

செப்டம்பர் 9, 2018 கர்த்தருடைய நாள் மாலை வேளையில்
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில் பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Evening, September 9, 2018


உலகம் எப்பொழுது முடியும் என்று சீஷர்கள் அறிய விரும்பினார்கள். அவர்கள் சொன்னார்கள், “உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” (மத்தேயு 24:3). அவர்கள் கிறிஸ்துவிடம் ஒரு அடையாளத்தை தங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். அவர் அவர்களுக்கு அநேக அடையாளங்களைக் கொடுத்தார், அவைகள் மத்தேயு 24, மற்றும் அதற்கு இணையான பாகமாகிய, லூக்கா 21ல் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்தேயு 24 அநேக அடையாளங்களைக் கொடுக்கிறது. மற்றும் லூக்கா 21 அவைகளில் அதிகமானவைகளைத் தருகிறது. நாம் அதிகமாக லூக்கா 21ஐ இன்றிரவு கவனிக்க போகிறோம். “உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” கிறிஸ்து அநேக அடையாளங்களை லூக்கா 21ல் கொடுத்தார், ஆனால் முதலாவதாக II பேதுருவுக்குத் திருப்பிக்கொள்ளுங்கள்.

திருப்பிக்கொள்ளுங்கள் II பேதுரு, மூன்றாம் அதிகாரம், 3ஆம் வசனம். இது ஸ்கோபீல்டு ஸ்டடி வேதாகமத்தில் 1319ஆம் பக்கத்தில் உள்ளது. அது சொல்லுகிறது,

“முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து” (II பேதுரு 3:3).

இந்தத் தலைப்பைபற்றி இன்றிரவு நான் பேசபோகிறேன்: “கடைசி நாட்களின் அடையாளங்கள்,” ஏனென்றால் இப்பொழுதே நாம் கடைசி நாட்களின் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலம் குறுகினதாக இருக்கிறது.

II பேதுரு 3:3ல் உள்ள ஆழமான கருத்தைக் கவனியுங்கள், “கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து.” இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள் “கடைசிநாட்கள்”. இந்தக் கருத்தும் மற்றும் இதன் கருத்துப்படிவமும் வேதாகமத்தில் திரும்பத்திரும்ப வருவதை நீங்கள் காணலாம்.

கடைசி நாட்களைப்போல வரலாற்றில் ஒரு கருத்து இருப்பதை வேதாகமம் போதிக்கிறது. அந்தக் காலகட்டத்தில் நாம் இப்பொழுது இருக்கிறோம் என்று அநேக வேதபோதகர்கள் சொல்லுகிறார்கள். அவர்கள் சொல்லுவது சரி என்று நான் நினைக்கிறேன். தேதிகளை முன்குறிப்பதற்கு விரோதமாக வேதாகமம் எச்சரிக்கிறது. ஆனால் “கடைசிநாட்கள்” என்ற ஒரு காலகட்டம் இருக்கிறது. அந்தப் பொதுவான காலகட்டத்தில் நாம் இப்பொழுது இருக்கிறோம் என்று ஒவ்வொரு அடையாளமும் குறிப்பிடுகிறது. லியோனாடு ரேவன்ஹில் சொன்னார், “இவைகள் கடைசிநாட்களாக இருக்கின்றன”.

II பேதுரு 3:3ல் உள்ள அடுத்த வார்த்தை “பரியாசக்காரர்கள்” ஆகும். இந்த மக்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் உலக முடிவையும் பற்றிய எண்ணத்தை பரியாசம் செய்வார்கள். இவர்கள் பரியாசம் செய்வார்கள் மற்றும் சிரிப்பார்கள். இவர்கள் இழிவான மற்றும் அவிசுவாசிகள் ஆகும். அவர்கள் சொல்லுவார்கள், “நாங்கள் தேவனை எங்கும் காணமுடியவில்லை. தேவன் உலகத்தை முடிவுகட்டுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஒரு தேவன் உண்டு என்றும் எங்களுக்கு நிச்சயமில்லை.” அவர்கள் எதிர்கால நியாயத்தீர்ப்பையும், கிறிஸ்து இந்த உலகத்துக்கு வானத்திலிருந்து திரும்ப வருவதைப் பற்றிய எண்ணத்தையும் மற்றொரு கோணத்திலிருந்து, பரியாசம் செய்வார்கள் மற்றும் சிரிப்பார்கள். தேவனுடைய கோபாக்கினையினால் இந்த உலகம் முடியப் போகிறது என்ற முழு எண்ணத்தையும் அவர்கள் பரியாசம் செய்வார்கள்.

“முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து” (II பேதுரு 3:3).

அவர்கள் ஏன் அப்படி கேலி செய்து நகைக்கிறார்கள்? அடுத்த சில வார்த்தைகள் நமக்குச் சொல்லுகிறது, “தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து” அல்லது “தங்கள் சுய இச்சைகளைப் பின்பற்றுவார்கள்.” அவர்கள் பாவத்தில் வாழ்கிறவர்கள். அதனால்தான் அவர்களுடைய பாவம் நிறைந்த வழியில் கிறிஸ்து குறுக்கிட மற்றும் இடைபட அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் தங்கள் இச்சைகளை நேசிக்கிறார்கள், அவர்கள் தங்கள் பாவங்களை அதிகமாக நேசிக்கிறார்கள் அதனால்தான் அவர்களுடைய வழியில் கிறிஸ்து இடைபட அவர்கள் விரும்பவில்லை, மற்றும் வேதாகமம் போதிக்கும் தேவனுடைய நியாயத்தீர்ப்பை அவர்கள் தள்ளிவிடுகிறார்கள்! தேவன் அன்பாக இருக்கிறவர், ஆனால் அவர் கோபமான மற்றும் நியாயந்தீர்க்கிற தேவனாக இருக்கிறார். அவர் பாவத்தைப்பற்றியும் பொல்லாப்பைப்பற்றியும் கோபம் கொள்ளுகிற ஒரு தேவனாக இருக்கிறார். இந்த மாய்மாலமான பரியாசக்காரர் சான்றுகளைச் சோதித்துப் பார்க்க மாட்டார்கள். அவர்கள் வேதாகமத்தை வாசிக்க மாட்டார்கள். அவர்கள் உண்மையை அறிய விரும்ப மாட்டார்கள் – ஏனென்றால் அவர்கள் மாய்மாலகாரர்கள். அவர்கள் பரியாசக்காரர்கள், தங்கள் சுய இச்சைகளின்படியே நடப்பவர்கள்!

பிறகு, அடுத்த வசனம் சொல்லுகிறது, “அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்…” (7ஆம் வசனத்தை பாருங்கள்). “இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லா தவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்து போகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக் கிறது” (II பேதுரு 3:3-7).

இப்பொழுது பத்தாம் வசனத்தைப் பாருங்கள்:

“கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்”

இந்த வேதாகமப் பகுதி ஒரு நியாயத்தீர்ப்பின் நாள் வரப்போகிறது என்று சொல்லுகிறது. பாவம் நிறைந்த இந்த உலகம் முழுவதும் தேவனுடைய நியாய தீர்ப்புக்கு முன்பாக ஒருநாளில் நிற்கப்போகிறது. நீ மனந்திரும்பாமல் இருந்தால் அந்த நாளில் தேவனுக்கு முன்பாக நிற்க வேண்டும். நீ இரட்சிக்கப்படாதிருந்தால் உனது பாவங்களுக்காக நீ நியாயந்தீர்க்கப்படுவாய்.

மற்றும் வரப்போகும் அந்த நாளைப்பற்றி சீஷர்கள் கேட்டுக்கொண்டிருந் தார்கள். அவர்கள் சொன்னார்கள், “உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” (மத்தேயு 24:3).

இப்பொழுது கிறிஸ்து அவர்களுக்கு அநேக அடையாளங்களைச் சொன்னார், மற்றும் அவைகளில் ஒரு சிலவற்றை நான் பட்டியலிட போகிறேன்.

I. முதலாவது, முடிவு சமீபமாக இருக்கிறது என்று சுற்றுச்சூழல் அடையாளங்கள் காட்டுகின்றன.

அங்கே இப்படி இருக்கும் என்று இயேசுவானவர் சொன்னார்

“மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும்... பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்… ஆதலால் பூமியின் மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிற தினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்” (லூக்கா 21:11, 25-26).

இதை நினைத்துப்பாருங்கள்! “பூமியின்மேல்” வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம் என்று இயேசுவானவர் சொன்னார். அங்கே தத்தளிப்பும் இடுக்கணும் மற்றும் வேதனையும் மிகுந்த பயமும் உண்டாகும், ஏனென்றால் “அவைகள் பூமியின்மேல் வரும் ஆபத்துகளாகும்.”

சமீப காலத்தில் ஓசோன் படலத்தில் வடதுருவத்தில் மைனே மாநிலம் அளவு பெரிதான ஒரு துளை உண்டாகி இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்கள். டைம் செய்தித்தாளில் ஒரு செய்தி இருந்தது – மேல்பக்கத்தில் பதிவாகி இருந்தது – “அந்தப் பெரிய உருக்கு ஊற்று. ஆர்டிக்கில் வெப்பம் அதிகரிக்கும்பொழுது, அது பூமியைச் சுற்றி ஒரு குளிர்ச்சி அனுப்பும்.” (டைம் செய்தித்தாள், செப்டம்பர் 4, 2000, பக்கம் 52-56). டைம் செய்தித்தாள் சொன்னது, “ஒரு பகுதி உருகுமானாலும் பூமியின் வடதுருவ பகுதியின் தட்பவெப்பநிலை பாதிக்கப்பட்டுப் பாழாக்கும்.” நாம் ஒரு புதிய ஐஸ் யுகத்துக்குப் போகப் போகிறோம் என்று அநேக விஞ்ஞானிகள் பயப்படுகிறார்கள். அந்தச் செய்தி வந்த காலகட்டத்தில், டாக்டர் ரிச்சாடு ஆலே, பென் ஸ்டேட் பல்கலைகழக பூகோள ஆராய்ச்சியாளர் சொன்னார், “மனித சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்ட பாதிப்புகள் எல்லாவற்றையும்விட வெப்பநிலை வீழ்ச்சியானது மிக (அதிகமான) அழிவின் மாறுதலைக் கொண்டுவரும்.” இது மனித வர்க்கத்தின் முடிவாக இருக்குமா? டாக்டர் ஆலே சொல்லுகிறார், “இல்லை, ஆனால் மனித வர்க்கத்துக்கு இது ஒரு அசௌகரியமான காலமாக இருக்கும். மிகவும் சௌகரியமற்ற காலமாக இருக்கும்.”

வாழ்க்கை துப்பாக்கி மற்றும் போர் நிறைந்ததாக இருக்கும்,
   ஒவ்வொருவரும் பூமியிலே நடுங்குவார்கள்.
நாம் அனைவரும் ஆயத்தமாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
   (“I Wish We’d All Been Ready,” Larry Norman, 1947-2008).

நீ ஆயத்தமாக இருக்ககிறாயா?

டாக்டர் ஆலிஸ் போன்ற விஞ்ஞானிகள் பயத்தினால் வாதிக்கப் படுகிறார்கள்

“பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர் பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்து போம்” (லூக்கா 21:26).

வடதுருகம் உருகுகிறதை நீ பார்க்கும்பொழுது, மற்றும் ஐஸ் யுகம் இன்னும் 25 வருடங்களில் எதிர்பாராதவிதமாக வரப்போகிறது என்று அவர்கள் சொல்லும்பொழுது, அது பயமுறுத்துதலாக இருக்கிறது. எய்ட்ஸ் தொற்று நோய்கள் ஆப்பிரிக்காவைச் சூரையாடுகிறது என்று நீ உணரும்பொழுது, முடிவில்லாமல் – அது பயமுறுத்துதலாக இருக்கிறது. நோய் எதிர்ப்புத் தன்மை குறையும்பொழுது காசநோய் மற்றும் புதிய “கோரவுரு” கொண்ட வியாதிகள் எந்த மருந்துகளுக்கும் கட்டுப்படாத நோய்கள் பெருகும்பொழுது – அது பயமுறுத்துதலாக இருக்கிறது.

அநேக இளம் மக்கள் எதிர்காலத்தைப்பற்றி பயந்துகொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை. சமீபகால கணக்கெடுப்பின்படி இன்றைய இளம் வயது மக்களில் 80 சதவீதம் பேர் தங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இல்லை என்று சொல்லுகிறார்கள். அந்தக் கணக்கெடுப்பின்படி இன்றைய இளம் வயது மக்களில் அநேகர், வடதுருவம் உருகுதல் மற்றும் ஐஸ்யுகம் அல்லது தண்ணீர் நிறைந்த உலகம் போன்ற சூழ்நிலை பிரச்சனைகளால் அடிக்கடி கவலைப்படுகிறார்கள்.

நமது உலகம் மோசமாகிகொண்டிருக்கிறது என்று இளம் மக்கள் இயற்கையாக அறிந்திருக்கிறார்கள். மற்றும் அது அவர்களைப் பயமுறுத்துகிறது. தென் கலிபோர்னியாவில் வருடமுழுவதும் உறைந்த குளிர் உண்டானால் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?

“பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர் பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்து போம்” (லூக்கா 21:26).

நமது கோளத்தை மனித வர்க்கம் அழிக்கிறது என்று இளம் மக்கள் ஆழமாக பயப்படுகிறார்கள். மற்றும் அவர்களுடைய கவலையை நான் பகிர்ந்து கொள்ளுகிறேன் – முழுமையாக!

எனது மனைவியும் நானும் எங்கள் முற்றத்திலே நின்றோம். நான் அவளிடம் கேட்டேன், “ஒரு தனித்துவமான வண்ணத்து பூச்சியை நீ கடைசியாக எப்பொழுது பார்த்தாய்? ஒரு தேரை அல்லது தவளையை நீ கடைசியாக எப்பொழுது பார்த்தாய்? அவைகள் போய்விட்டன – அல்லது அப்படி வெகுசமீபமாக போய்விடும்.” அவள் என்னிடம் சொன்னாள், “ஆமாம், நாம் மெய்யாகவே சுற்றுப்புறச் சூழ்நிலையைக் குழப்பி விட்டோம்.” ஒரு மனிதன் என்னிடம் சொன்னார், “நமது கூடுகளைத் தீமையினால் மூடி மற்றும் உலகத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம்.” துக்கமாக, நான் இதை ஒத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அவர் சொல்லுவது மிகவும் சரியானது.

மற்றும் சூழ்நிலையில் நாம் பார்க்கும் பயமுறுத்தும் பிரச்சனைகள், ஒவ்வெரு நாளும் செய்திதாள்களில் வருகிறது, உலக முடிவும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் மிகவும் சமீபமாக இருக்கிறது. வேதாகமம் சொல்லுகிறது, “உன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு”. ஆயத்தப்படுவதற்கு உனக்கு அதிகமான நேரம் இல்லை! லாரி நார்மன் சொன்னார்,

வாழ்க்கை துப்பாக்கி மற்றும் போர் நிறைந்ததாக இருக்கும்,
   ஒவ்வொருவரும் பூமியிலே நடுங்குவார்கள்.
நாம் அனைவரும் ஆயத்தமாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நீ ஆயத்தமாக இருக்கிறாயா?

அதனால்தான் நீ சபைக்குள் வந்து கிறிஸ்துவை இப்பொழுதே கண்டு கொள்ள வேண்டியதாக இருக்கிறது! நமது உலகத்துக்கு நேரம் ஓடிக்கொண்டு இருக்கிறது. நீ கிறிஸ்துவை விரைவாக கண்டு கொள்ள வேண்டியதாக இருக்கிறது, மனந்திரும்பு, நியாயத்தீர்ப்பு வருவதற்கு முன்பாக இந்தச் சபையிலே ஆழமாக போ. நீ கிறிஸ்துவில் இருக்கும்பொழுது, தீமையிலிருந்து உன்னை பாதுகாக்க மற்றும் உன்னை பத்திரமாக வைக்க தேவன் வாக்கு கொடுக்கிறார்.

என்னை மறைத்துக்கொள்ளும், ஓ என் இரட்சகரே, மறைத்துக்கொள்ளும்,
   வாழ்க்கையின் புயல் கடந்து போகும் வரைக்கும்;
பரலோக வழிகாட்டிக்குள் பத்திரமாக வையும்,
   ஓ எனது ஆத்துமாவை கடைசியில் ஏற்றுக்கொள்ளும்!
(“Jesus, Lover of My Soul,” Charles Wesley, 1707-1788).

II. ஆனால் இரண்டாவதாக, இனம் சார்ந்த அடையாளங்கள் முடிவு சமீபமாக இருக்கிறது என்பதை காட்டுகின்றன.

லூக்கா 21:10 அதைப்பற்றி பேசுகிறது,

“அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு (கிரேக்கில் எத்தோன்ஸ் அல்லது ஏத்தனிக் குருப்) விரோதமாய் ஜனமும் (எத்தனிக் குருப்), ராஜ்யத்துக்கு (பாசிலியன் = தேசிய குருப்) விரோதமாய் ராஜ்யமும் (தேசிய குருப்) எழும்பும்” (லூக்கா 21:10).

இதைதான் இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நமது எல்லா தொழில் நுணுக்கங்கள் மற்றும் விஞ்ஞானத்தைக்கொண்டு நம்மால் இனங்கள் இடையிலும் நாடுகள் இடையிலும் நடக்கும் எத்தனிக் யுத்தங்களை நிறுத்த முடியவில்லை. அரபுகளுக்கும் யூதர்களுக்கும் இடையில் சமாதானத்தை உண்டாக்க ஒவ்வொரு தலைவர்களும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நமது ஜனாதிபதிகள் எல்லாரும் தோற்றுப்போனார்கள்! கிறிஸ்து திரும்ப வரும்பொழுது மட்டுமே எல்லாவிதமான இனங்கள் மற்றும் எத்தனிக் குழுக்கள் மத்தியில் சமாதானம் இருக்கும்! கிறிஸ்து திரும்ப வரும்பொழுது மட்டுமே எல்லா இனங்கள் மற்றும் எத்தனிக் குழுக்களுக்குச் சமாதானத்தைக் கொண்டு வருவார். வேறுஒருவரும் அதை செய்ய முடியாது – வரப்போகும் அந்திகிறிஸ்துவும்கூட முழுமையாக வெற்றிகொள்ள முடியாது. இயேசு கிறிஸ்து மட்டுமே எல்லாவிதமான இனங்கள் மற்றும் எத்தனிக் குழுக்கள் மற்றும் நாடுகளுக்கு மத்தியில் சமாதானத்தைக் கொண்டு வரமுடியும் – அவர் இந்தப் பூமிக்கு திரும்ப வரும்பொழுது (அப்பொழுது மட்டுமே) பூமியிலே சமாதானமும் எல்லா மனிதருக்கும் நல்ல பிரியமும் இருக்கும்!

வாழ்க்கை துப்பாக்கி மற்றும் போர் நிறைந்ததாக இருக்கும்,
   ஒவ்வொருவரும் பூமியிலே நடுங்குவார்கள்.
நாம் அனைவரும் ஆயத்தமாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நீ ஆயத்தமாக இருக்கிறாயா?

III. பிறகு, மூன்றாவதாக, நம்மை சுற்றிலுமுள்ள ஆன்டிசெமிடிக் அடையாளங்கள், முடிவு சமீபமாக இருப்பதை காட்டுகின்றன.

பூமியிலே தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களாகிய, யூதர்களை அநேக மதிகெட்ட மக்கள் வெறுக்கிறார்கள். லூக்கா 21ன் பகுதி சொல்லுகிறது:

“எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை (அல்லது வளைக்கப்பட்டதை) நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று (நெருங்கிவிட்டது) அறியுங்கள்” (லூக்கா 21:20).

ஆன்டிசெமிடிஸம், யூதர்களை வெறுப்பது, கடைசி நாட்களில் அதிகமான பலத்தோடு வளரும், அந்தப் பெரிய புறஜாதிகளின் படைகள் யூதமக்களுக்கு விரோதமாக எருசலேமுக்கு வருவார்கள் அவர்களை அழிக்க தேடுவார்கள், 2ஆம் உலகப்போரில் ஹிட்லர் செய்ததைபோல. ஆனால் வேதாகமத்தின்படி பூமியிலே தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் யூதர்களாகும். வேதாகமம் சொல்லுகிறது,

“தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் பிதாக்களி னிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள்” (ரோமர் 11:28).

ஆபிரகாம், மோசே மற்றும் தீர்க்கதரிசிகள் இல்லை என்றால் நீ இந்த இரவிலே இங்கே இருக்க முடியாது. அதனால்தான் வேதாகமத்தை விசுவாசிக்கும் பாப்டிஸ்டுகள் இஸ்ரவேலுக்கு ஒரு பெரிய துணையாக இருக்கிறார்கள்.

ஆனால் பாவம் நிறைந்த உலகத்தில் உள்ள வேதாகம போதகர்கள் கடைசி நாட்களில் யூதர்களுக்கு விரோதமாக திரும்புவார்கள். தேவன் சொல்லுகிறார்:

“அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்” (சகரியா 12:3).

அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. நாம் இப்பொழுது கடைசி காலத்தில் வாழுகிறோம் என்பதற்கு இது ஒரு அடையாளமாகும்.

வாழ்க்கை துப்பாக்கி மற்றும் போர் நிறைந்ததாக இருக்கும்,
   ஒவ்வொருவரும் பூமியிலே நடுங்குவார்கள்.
நாம் அனைவரும் ஆயத்தமாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நீ ஆயத்தமாக இருக்கிறாயா?

IV. அதன்பிறகு, நான்காவதாக, மதங்களின் அடையாளங்கள் – பொய்யான மதங்களினால் ஏமாற்றுதலின் அடையாளங்கள், முடிவு சமீபமாக இருப்பதை காட்டுகிறது.

“அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும்… சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றா திருங்கள்” (லூக்கா 21:8).

மறுபடியும் கிறிஸ்து சொன்னார்:

“கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்” (மத்தேயு 24:24).

TBNல் நீங்கள் பார்க்கும் அதிகமானவைகள் – இந்தப் பகுதியில் 17வது சேனலில் நீங்கள் பார்ப்பவைகள் – ஒரு வஞ்சகமாகும். பென்னி ஹின் ஒரு ஏமாற்றுபவர். ஜோயல் ஓஸ்டின் ஒரு ஏமாற்றுபவர். சுவிசேஷ ரேடியோக்கள் மற்றும் டெலிவிஷன்களில் வரும் அதிகமானவர்கள் ஏமாற்றுபவர்கள். ஆதனால்தான் நான் டாக்டர் மெக்ஜீயை மட்டும் சிபாரிசு செய்கிறேன், வேறு ஒருவரையும் அல்ல! நான் அந்த மென்மையான புதிய சுவிசேஷகர்களை நம்புவதில்லை!

“ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு” (II தீமோத்தேயு 4:3).

இந்த அடையாளம் இப்பொழுதே நடக்கிறது! அந்த முடிவு சமீபமாக இருக்கிறது!

V. ஐந்தாவதாக, மதங்களின் உபத்திரவ அடையாளங்கள், முடிவு சமீபமாக இருப்பதை காட்டுகிறது.

கிறிஸ்தவர்களை உபத்திரவப் படுத்துதல் உலக முழுவதிலும் ஒரு கணக்கில்லாத அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, கம்மினிஸ்டு சீனாவில் அநேக கிறிஸ்தவர்கள் இரகசியமாக கூடவேண்டியதாக இருக்கிறது. தி லாஸ் ஏன்ஜல்ஸ் டைம்ஸ் ஓர் அறிக்கையைத் தருகிறது அதாவது மூன்று ஆத்தும ஆதாயம் செய்பவர்கள் சுவிசேஷத்தை பகிர்ந்து கொண்டதற்காக சீனாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்கள் என்று:

மூன்று யூ.எஸ். சுவிசேஷகர்களை (ஆத்தும ஆதாயம் செய்பவர்கள்) மத்திய சீனாவில் தரைக்குக் கீழிருந்த புரோட்டஸ்டன்டு ஆராதனை செய்பவர்களிடமிருந்து சுற்றிவளைத்துச் சிறைபடுத்தின பிறகு அவர்களை நாடு கடத்தினார்கள், இதை ஒரு உரிமைக் குழு அறிவித்தது. அந்த அறிக்கை... டஜன் கணக்கான ஆராதனை செய்யும் சீனர்கள் அவர்களோடு கைதுசெய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். ஒரு ஐம்பது பின்பற்றுபவர்கள் அவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்... மூன்று பிராவின்ஸ்களில் புரோட்டஸ்டன்டு ஆராதனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டார்கள், ஆங்காங் பேஸ்டு இம்பர்மேஷன் சென்டர் ஆப் ஹூமன் ரைட்ஸ் அன்டு டெமாகிரடிக் மூமென்ட் இன் சீனா இந்த அறிக்கையை தந்தது.

இயேசுவானவர் முன்னறிவித்த உலகளவான உபத்திரவம் இன்று கிறிஸ்தவர்களுக்கு நடந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம். அவர் சொன்னார்,

“அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து… உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்” (லூக்கா 21:12).

அதன் பிறகு அவர் சொன்னார் நீ ஒரு உண்மையான கிறிஸ்தவனாக மாறினால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களும்கூட உன்னை உபத்திரவப்படுத்துவார்கள். இந்த லாஸ் ஏன்ஜல்சில் இங்கேயே மேலும் மேலும் துன்பப்படுத்தினதை நாம் பார்த்திருக்கிறோம். கிறிஸ்து சொன்னார்:

“பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்… என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்” (லூக்கா 21:16-17).

கிறிஸ்து சொன்னார் நீ ஒரு உண்மையான கிறிஸ்தவனாக மாறினால் அநேக பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் உன்னை உண்மையாகவே வெறுப்பார்கள். சிரிக்க வேண்டாம். உலகத்தின் அதிக இடங்களில் ஏற்கனவே இது உண்மையாக இருக்கிறது. முகமதியர்கள் நம்மை வெறுக்கிறார்கள், நம்மை கொல்லுகிறார்கள், உலகின் அதிக இடங்களில் நம்மை இன்றிரவு சிறைகளில் போடுகிறார்கள்.

முதலாவதாக, நீ மறுபடியும் இந்தச் சபைக்கு வந்து இரட்சிக்கப் படாதபடிக்கு உன்னை தங்களால் முடிந்த வரையிலும் தடை செய்வார்கள். ஆனால் நீ தொடர்ந்து இங்கே சபைக்கு வந்து இரட்சிக்கப்பட்டால், அவர்கள் உனக்கு விரோதமாக திரும்பி மற்றும் உன்னை வெறுப்பார்கள். அவர்கள் உன்னை நிறுத்த முடியாதபோது, வழக்கமாக அநேக மாதங்கள் அப்படி செய்வார்கள்.

ஆனால் விலைகிரயத்தை கணக்கிடு! நீ உண்மையான கிறிஸ்தவனாக மாறினால் சிலர் அதை விரும்பமாட்டார்கள்! சிலர் உனக்கு விரோதமாக வருவார்கள்! இந்த இருண்ட காலத்தில் ஒரு உண்மையான கிறிஸ்தவனாக மாறுவதற்கு விலைகிரயத்தை கணக்கிட வேண்டும். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதற்கு இது ஒரு அடையாளம்.

வாழ்க்கை துப்பாக்கி மற்றும் போர் நிறைந்ததாக இருக்கும்,
   ஒவ்வொருவரும் பூமியிலே நடுங்குவார்கள்.
நாம் அனைவரும் ஆயத்தமாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நீ ஆயத்தமாக இருக்கிறாயா?

VI. இறுதியாக, நாம் முடிவின் அருகில் இருக்கிறோம் என்பதற்கு கிறிஸ்து நமக்கு ஆறு அடையாளங்களை கொடுத்தார். இதை நான் “உளவியல் அடையாளங்கள்” என்று சொல்லுவேன்.

கிறிஸ்து சொன்னார்,

“உங்கள் இருதயங்கள்… வெறியினாலும் (இந்த) லவுகீக கவலைகளினாலும் (ஏக்கம்) பாரமடையாதபடிக்கும் (பாரத்தால் கீழே இழுக்காதபடிக்கு, அல்லது எடையில் குறையாதபடிக்கு), நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையா யிருங்கள் (கவனமாக இருங்கள்) பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப் போல வரும்” (லூக்கா 21:34-35).

ஒரு இளம் மனிதன் ஒருசில தடவைகள் சபைக்கு வந்தவன் சொன்னான், “நான் அடுத்த ஞாயிறு வரமுடியாது. எனது ஆன்டி இயங்குவதற்கு நான் உதவி செய்ய வேண்டும்.” அதை செய்ய அவனுக்கு ஆறுநாட்கள் இருக்கிறது, ஆனால் ஞாயிறு காலையில் அது நடக்க “நேர்ந்தது”. அவன் வாழ்க்கையின் பிரச்சனையோடு எடை போட்டான். இன்று மக்கள் எளிய மற்றும் முட்டாள்தனமான காரியங்களுக்காக சபையைத் தவறவிடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் கவலைகளினால் எடைபோட்டுக் கீழாக போகிறார்கள். மற்றும் அவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்பின் நாள் அவர்கள் எதிர்பாராமல் வரும் – அவர்கள் சிறிதும் எதிர்பாராதபோது, முடிவு அவர்களுக்கு வரும்!

வாழ்க்கை துப்பாக்கி மற்றும் போர் நிறைந்ததாக இருக்கும்,
   ஒவ்வொருவரும் பூமியிலே நடுங்குவார்கள்.
நாம் அனைவரும் ஆயத்தமாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நீ ஆயத்தமாக இருக்கிறாயா?

உனக்கு கடந்த போதைபொருள்கள் மற்றும் பால்உறவு கிடைக்க முடியும், ஆனால் உன்னை கீழே இழுக்கும் குடும்பப் பிரச்சனைகள் உன்னை எடையில் தாழ்த்தும். இந்த வருடங்களிலெல்லாம் அநேக இளம் தம்பதிகளுக்கு அது நடந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

அதன்பிறகு இயேசு சொன்னார்:

“இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான் களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள்” (லூக்கா 21:36).

வரப்போகும் நியாயத்தீர்ப்புக்கும் உலகத்தின் முடிவுக்கும் நீ ஆயத்தமாக இருக்க வேண்டுமானால் நீ செய்யவேண்டியது இதுதான். நீ செய்ய தேவையான மூன்று காரியங்கள் உள்ளன:

(1) இந்த சபைக்கு வா. இதை நீ செய்யாவிட்டால் வேறு ஒன்றும் உனக்கு உதவி செய்ய முடியாது.

(2) கிறிஸ்துவிடம் வா. அவர் உனது பாவங் களுக்காக மரித்தார். அவர் எழுத்தின்படியும் சரீரபிரகாரமாகவும் மரித்தோரிலிருந்து உயிர்த் தெழுந்தார். அவர் இப்பொழுது தேவனுடைய வலது பாரிசத்தில் ஜீவிக்கிறார். இப்பொழுது உனக்காக அவர் அங்கே இருக்கிறார். அவரிடம் வா. இயேசுவை நம்பு மற்றும் இரட்சிக்கப்படு!

(3) இந்தச் சபைக்கு நீ வருவது மட்டுமல்ல, நீ கிறிஸ்துவிடம் வருவது மட்டும் போதாது, ஆனால் நீ ஜெபிக்க வேண்டும். இந்தக் கடைசி காலங்களில் ஒரு வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழவேண்டுமானால் அதற்குச் சாவி ஜெபம் என்று இயேசு சொன்னார்.


வரப்போகும் நியாயத்தீர்ப்புக்கு நீ எப்படி தப்பித்துக்கொள்ள போகிறாய்? வேதாகமம் சொல்லுகிறது, “[கிறிஸ்து] தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார் – சிலுவையின்மேல். உனக்குப் பதிலாளாக கிறிஸ்து இருக்க முடியும். உனது பாவத்துக்குரிய தண்டனை கிரயத்தை, சிலுவையில் செலுத்தும்படி உனது ஸ்தானத்திலே அவர் தண்டிக்கப்பட்டார்! கிறிஸ்து தமது விலையேறப்பெற்ற இரத்தத்தைச் சிலுவையிலே சிந்தினார். அவரது இரத்தம் உனது சகல பாவங்களையும் கழுவி நீக்க முடியும் – மற்றும் முடிவு வரும்பொழுது நீ ஆயத்தமாக இருப்பாய்! இன்று இரவிலே நீ இயேசு கிறிஸ்துவை நம்பும்படி நான் உன்னை கேட்கிறேன்! சார்லஸ் வெஸ்லி சொன்னார்,

என்னை மறைத்துக்கொள்ளும், ஓ என் இரட்சகரே, மறைத்துக்கொள்ளும்,
   வாழ்க்கையின் புயல் கடந்து போகும் வரைக்கும்;
பரலோக வழிகாட்டிக்குள் பத்திரமாக வையும்,
   ஓ எனது ஆத்துமாவை கடைசியில் ஏற்றுக்கொள்ளும்!

ஒரு சுவிசேஷ பாடல் சொல்லுகிறது,

இன்றுள்ள உலகத்துக்கு இயேசுவே பதிலாக இருக்கிறார்,
அவருக்கு மேலாக வேரொருவரும் இல்லை,
இயேசுவே வழியாக இருக்கிறார்!

இன்று இரவிலே இயேசுவை நம்பு மற்றும் அவர் உன்னை இரட்சிப்பார்! ஆமென்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

போதனைக்கு முன்னதாக தனிப்பாடல் பாடியவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்: “I Wish We’d All Been Ready” (Larry Norman, 1947-2008).


முக்கிய குறிப்புகள்

கடைசி நாட்களின் அடையாளங்கள்

SIGNS OF THE LAST DAYS

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர்
by Dr. R. L. Hymers, Jr.

“முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து” (II பேதுரு 3:3).

I.   முதலாவது, முடிவு சமீபமாக இருக்கிறது என்று சுற்றுச்சூழல் அடையாளங்கள் காட்டுகின்றன, லூக்கா 21:11, 25-26.

II.  இரண்டாவது, இனம் சார்ந்த அடையாளங்கள் முடிவு சமீபமாக இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன, லூக்கா 21:10.

III. மூன்றாவது, நம்மை சுற்றிலுமுள்ள ஆன்டிசெமிடிக் அடையாளங்கள், முடிவு சமீபமாக இருப்பதைக் காட்டுகின்றன, லூக்கா 21:20;
ரோமர் 11:28; சகரியா 12:3.

IV. நான்காவது, மதங்களின் அடையாளங்கள் – பொய்யான மதங்களினால் ஏமாற்றுதலின் அடையாளங்கள், முடிவு சமீபமாக இருப்பதைக் காட்டுகிறது, லூக்கா 21:8; மத்தேயு 24:24; II தீமோத்தேயு 4:2-3.

V.  ஐந்தாவது, மதங்களின் உபத்திரவ அடையாளங்கள், முடிவு சமீபமாக இருப்பதைக் காட்டுகிறது, லூக்கா 21:12, 16-17.

VI. ஆறாவது, நாம் முடிவின் அருகில் இருக்கிறோம் என்பதற்கு கிறிஸ்து நமக்கு ஒரு ஆறு அடையாளங்களைக் கொடுத்தார். இதை நான் “உளவியல் அடையாளங்கள்” என்று சொல்லுவேன்,
லூக்கா 21:34-36.