Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




வாரினால் அடிக்கப்படுதல், வெட்கப்படுத்தப்படுதல் மற்றும் துப்பப்படுதல்

THE SCOURGING, SHAME AND SPITTING
(Tamil)

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

மார்ச் 26, 2017 அன்று கர்த்தருடைய நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை
வேளையில் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பாப்திஸ்து கூடாரத்தில்
பிரசங்கிக்கப்பட்ட செய்தி
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, March 26, 2017

“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).


எத்தியோப்பியனோடு சேர்ந்து நாமும் கேட்கலாம், “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக் குறித்தோ?” (அப்போஸ்தலர் 8:34). 53ஆம் அதிகாரத்தைப் போல, ஏசாயா இங்கே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி பேசினார் என்பதில் நாம் சந்தேகப்பட முடியாது. மெய்யாகவே எருசலேமுக்குப் போகும்போது சீஷர்களிடம் குறிப்பிட்ட தீர்க்க தரிசனங்களில் இதுவும் ஒன்றாகும் மற்றும் சொன்னார்,

“இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார்” (லூக்கா 18:31-33).

இயேசு அவர்களுக்குச் சொன்னார் புறஜாதியார் அவரை பரியாசம் பண்ணுவார்கள், நிந்திப்பார்கள், வாரினால் அடிப்பார்கள், மற்றும் கொலைசெய்வார்கள். இவையெல்லாம் “தீர்க்கதரிசிகளால்” முன்னறிவிக்கப் பட்டது என்று சொன்னார். அதனால் நமது பாடம் அவர் குறிப்பிட்ட வசனங்களில் ஒன்றாகும்,

“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).

பிறகு இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி எழுத்தளவாக நிறைவேறினது என்பதை பாருங்கள். ரோம அதிபதியாகிய, பொந்தியு பிலாத்து, அவரை வாரினால் அடிப்பித்தான். அதன்பிறகு ரோம சேவகர்கள்,

“…முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி…” (மாற்கு 15:17-19).

அதனால் இது அந்தத் தீர்க்கதரிசன வசனங்களை நிறைவேற்றின, நமது மீட்பர், நசரேயனாகிய இயேசு என்று நான் உணர்த்தப்பட்டேன்,

“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).

இந்தக் காட்சியை ஜோசப் ஹார்ட் விவரிப்பார்,

இயேசு எவ்வளவு பொறுமையாக நிற்கிறார் பாருங்கள்,
   இந்த பயங்கரமான இடத்தில் நிந்திக்கப்பட்டவராக!
சர்வவல்லவரின் கரங்களை பாவிகள் கட்டினார்கள்,
   சிருஷ்டிகரின் முகத்தில் அவர்கள் துப்பினார்கள்.
முட்களால் அவரது தலையில் முடிவைத்து அடித்தார்கள்,
   ஓவ்வொரு பாகத்திலிருந்தும் இரத்த ஊற்று வந்தது;
அவாது முதுகு கனமான வாரினால் தாக்கப்பட்டது,
   ஆனால் கூராணிகள் இருதயத்தை கிழித்தது.
(“His Passion” by Joseph Hart, 1712-1768; altered by the Pastor).

“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).

பாடுபடும் இரட்சகரை இன்று இரவு நான் உங்களிடம் கொண்டு வருகிறேன். பிலாத்துவோடு சேர்ந்து நான் சொல்லுகிறேன், “இதோ அந்த மனிதன்.” உங்கள் இருதயங்களை திருப்பி உணர்வுகளோடிருக்கும் அவரை பாருங்கள். அவர் யார் என்று பாருங்கள், என்ன ஒரு மாதிரியை வைத்தார், மற்றும் நித்திய அக்கினியிலிருந்து பாழாக்கப்பட்ட பாவிகளை இரட்சிக்க அவர் என்ன செய்தார் என்று பாருங்கள்.

I. முதலாவதாக, மனித அவதாரமெடுத்த தேவனாக அவரை பாருங்கள்.

இந்த பூமியிலே மனிதர்கள் மத்தியில் வாழும்படியாக தேவன் மனிதனாக மாம்சத்தில் வந்தார். அவர் ஏசாயா 50:2ல் சொன்னார், “நான் வந்தேன்.” குமாரனாகிய தேவன் பரத்திலிருந்து இறங்கி “வந்தார்” மற்றும் நம் மத்தியில் வாசம் பண்ணினார்.

“அந்த வார்த்தை தேவனாயிருந்தது… அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோவான் 1:1, 14).

“தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்” (I தீமோத்தேயு 3:16).

பழங்கால கிறிஸ்தவர்கள் இயேசுவை சரியாக அழைத்தார்கள், “தேவாதி தேவன், ஒளிக்கு ஒளி, மெய்யான தேவனுக்கு மெய்யான தேவன், அவர் செய்யப்பட்டவரல்ல பிறப்பிக்கப்பட்டவர்.”

இதை நினைத்துப் பாருங்கள் மற்றும் இது மனிதனுடைய இருதயத்தில் நுழையாத மிகவும் குறிப்பிடத்தக்க போதனை என்பதைக் காண்பீர்கள். ஸ்பர்ஜன் சொன்னார்,

அது நன்றாக உறுதி படுத்தப்படவில்லையா, முடிவில்லாத தேவன் எல்லாவற்றையும் நிரப்புகிறவர், இருந்தவர் மற்றும் இருக்கிறவர், மற்றும் வரப்போகிறவர், சர்வவல்லவர், சர்வஞானி, சர்வவியாபி, மெய்யாகவே தன் உயர்நிலை துறந்து நம்முடைய உள்ளான களிமண்ணாக தம்மைதாமே திரையிட்டு கீழ்நிலைக்கு வந்தவர் இது முழுமையாக நம்பமுடியாதது. அவர் எல்லாவற்றையும் உண்டாக்கினார், இருந்தாலும் ஒரு சிருஷ்டியின் மாம்ச வடிவத்தை எடுத்து தம்மைதாமே ஐக்கியப்படுத்தினார்… நமது கர்த்தரின் மனுஷீகம் பிசாசு அல்ல… மனித வடிவான தோற்றத்தில் அல்ல: எல்லா சந்தேகத்துக்கும் அப்பாற்பட்டது “அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” “என் கைகளையும் என் கால்களையும்; பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்” அவர் சொன்னார், “நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே” (C. H. Spurgeon, “The Great Mystery of Godliness,” The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1979 reprint, volume 28, p.698).

இயேசு மனித மாம்சத்தில், உபபரநிலை ஐக்கியத்தின் மூலமாக வந்த தேவன். அவர் மனித அவதாரமான தேவன், பரிசுத்த திரித்துவத்தில் இரண்டாம் நபர், வார்த்தை மாமிசமானது!

நம்முடைய பாடத்தை மனித மனதில் புரிந்து கொள்ள முடியாது என்பதை இது வெளிப்படுத்துகிறது! இங்கே தேவன் மனித மாம்சத்தில் தம்மை மட்டுப்படுத்தவும் மற்றும் சித்ரவதை செய்யவும் அனுமதித்தார்! தேவன் மனிதனாகி அவர் சொன்னது மனித எண்ணத்துக்கு எட்டாதது,

“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).

இங்கே இந்த பிரபஞ்சத்தை மற்றும் அதில் உள்ள யாவையும் சிருஷ்டித்தவர், பாவமுள்ள மனிதன் அவரது முதுகில் அடிக்க, மற்றும் அவரது தாடியை பிடுங்க அனுமதிக்கிறார்! இங்கே என் தேவன் அவருடைய பரிசுத்த முகத்தில் கீழ்தரமான பாவிகள் துப்ப அனுமதிக்கிறார்! அவர்கள் தேவனுடைய முகத்தில் துப்பினார்கள்!

இயேசு எவ்வளவு பொறுமையாக நிற்கிறார் பாருங்கள்,
இந்த பயங்கரமான இடத்தில் நிந்திக்கப்பட்டவராக!
சர்வவல்லவரின் கரங்களை பாவிகள் கட்டினார்கள்,
சிருஷ்டிகரின் முகத்தில் அவர்கள் துப்பினார்கள்.
(“His Passion” by Joseph Hart).

II. இரண்டாவதாக, நமது மாதிரியாக அவரை பாருங்கள்.

“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).

தேவனுடைய ஊழியக்காரனாக, இயேசு தமது முதுகில் பாவிகள் அடிக்க, அவரது மயிரை பிடுங்க, மற்றும் அவருடைய முகத்தில் துப்ப அனுமதித்தார். கோராவுக்கு செய்யப்பட்டதுபோல பூமிதிறந்து அப்படியே அவர்களை கீழே அனுப்பி இருக்க அவரால் முடியும், அல்லது எலியா செய்ததுபோல, அக்கினியால் அவர்களை எரித்திருக்க அவரால் முடியும். ஆனால் அவர் “அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார் (ஏசாயா 53:7). அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்னார்,

“இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார். அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்” (I பேதுரு 2:21-23).

நமது வாழ்க்கையை மற்றும் பணத்தை கொடுப்பதற்கு நாம் சித்தமாக இருக்கலாம், ஆனால் நாம் தாழ்த்தப்படும்போது மற்றும் வீண்பழி சுமத்தப்படும்போது பின் வாங்கினவர்களாக உணருவோம். ஆனால் இயேசு ஏளனம் செய்யப்பட்டார் மற்றும் மோசக்காரன் என்று படுமோசமான பாவிகளால் அழைக்கப்பட சித்தமாக இருந்தார் தம்மை சார்ந்து கொள்ளவில்லை. நாம் ஒரு கிறிஸ்தவராக இருப்பதால் நமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நம்மை மாய்மாலக்காரர் என்று அழைக்கும்பொழுது, மற்றும் நம்மை தீதாக பேசும்பொழுது நாம் என்ன சொல்லுகிறோம்? “இயேசுவோ பேசாமலிருந்தார்” என்பதை நாம் நினைவுகூற வேண்டியது அவசியமாகும், சிலுவையில் அறையப்படுவதற்கு முன்நாள் இரவில் அவர் பொய்ச் சாட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டார் (மத்தேயு 26:63). பிலாத்து அவரிடம் கேட்டான், “இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா”. இயேசுவோ “ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்” (மத்தேயு 27:13-14).

இயேசுவை இழிவுபடுத்தும் வகையிலான “The Last Temptation of Christ” என்ற சினிமாவுக்கு விரோதமாக நான் ஆர்பாட்டம் செய்தபொழுது நான் இந்தப் பாடத்தை மிகவும் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்டேன். என்னை குற்றப்படுத்தும்படி யூதா எதிர்ப்பு மற்றும் துரோகிகள் மூலம் பொய்ச் சாட்சிகள் வந்தது. இது முற்றிலும் பொய்யானது. நான் யூதமக்களை நேசிக்கிறேன், இஸ்ரவேல் நாட்டை என் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் நான் எப்பொழுதும் நேசிக்கிறேன். ஆனால் நான் இயேசுவின் சார்பாக இருந்தபொழுது என்னுடைய வாழ்நாளில் நண்பர்களாக இருந்தவர்கள் எனக்கு விரோதமாக திரும்பினபொழுது அந்தத் தவறான குற்றசாட்டுகளை மௌனமாக தாங்கிக்கொள்ள கற்றுக்கொண்டேன். இருபது வருடங்களாக என்சார்பாக நான் சிறிதளவே சொன்னேன். சமீப காலத்தில்தான் நமது சபையின் சாட்சியை பாதுகாக்க இந்தப் பொய்க் குற்றம் சாட்டுபவர்களுக்கு விரோதமாக நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன். இயேசு சொன்னார்,

“மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும் போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள்பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்” (லூக்கா 6:22-23).

இரட்சகருடைய இந்த வார்த்தைகள் சோதனையின் நேரங்களில் எனக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருந்தன. இயேசுவின் நிமித்தமாக உலகம் நம்மை குற்றப்படுத்தும்போது நம்மை பாதுகாக்க வேண்டுமென்று அதிவிரைவாக நான் நினைப்பதில்லை. “The Last Temptation” என்ற சினிமாவுக்கு விரோதமாக ஆர்பாட்டம் செய்தபொழுது என்னை ஒரு மனிதன் சரியாக எழுத்தின்படி என் முகத்தில் துப்பினான். நான் அங்கே செய்தி கேமராக்களுக்கு முன்பாக அந்த எச்சில் முகத்தில் வடிய நின்றேன். பழிக்குபழி வாங்கக்கூடாது என்று நான் இயேசுவிடமிருந்து கற்றுக் கொண்டேன், அவர் தமது “முகத்தை வெட்கத்துக்கும் உமிழ்நீருக்கும்” விலக்கவில்லை. நான் அந்த மனிதனிடம் அன்பாக இருக்க என்னால் முடிந்த வரையிலும் முயற்சி செய்தேன். பரிதாபமானவன்! அதன்பிறகு அவன் கொலை செய்யப்பட்டான். நான் அடைந்த துக்கம் மற்றும் அவனுக்காக மற்றும் அவனுடைய குடும்பத்துக்காக நான் சிந்தின கண்ணீரை தேவன் அறிவார்.

நமது பாடத்தைப்பற்றி ஒரு போதனையில் ஸ்பர்ஜன் சொன்னார், “நீங்கள் மனிதரால் நிந்திக்கப்பட்டு மற்றும் தள்ளப்பட்டாலும், நீங்கள் குறைந்து, மற்றும் குறைந்துகொண்டே போகவேண்டியது அவசியம், இதுவே நித்திய மகிமைக்கு போகும் பாதை” (“The Shame and Spitting,” The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1972 reprint, volume 25, p. 431).

இந்தப் பொல்லாத நாட்களில் அவரை பின்பற்றுபவர்களாகிய நம்மை மக்கள் ஏளனம் செய்து மற்றும் நமக்கு விரோதமாக பேசும்பொழுது நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் மாதிரியை நினைவில் கொள்வோம். ஸ்பர்ஜன் சொன்னார்,

நீங்கள் வலிகள் மற்றும் வேதனைகள் நிறைந்தவர்களாக இருக்கிறீர்களா…? அவை எல்லாவற்றைப்பற்றியும் இயேசு அறிந்திருக்கிறார், அவர், “அடிக்கிறவர்களுக்குத் தமது முதுகை கொடுத்தார்.” நீங்கள் பாதிக்கப் படுகிறீர்களா… அவதூறு செய்பவர்களால்? “அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் அவர் முகத்தை மறைக்கவில்லை.” நீங்கள் பரிகாசம் பண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா…? இரக்கமில்லாதவர்களால் உங்கள் தேவபக்திக்காக வேடிக்கையாக்கப் பட்டிருக்கிறர்களா? இயேசு உங்கள்மீது இரக்கப்பட முடியும், என்னவிதமான பரிசுத்தமில்லாத பரிகாசத்தை அவரிடம் அவர்கள் செய்தார்கள் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்கள் இருதயத்தை கிழிக்கும் ஒவ்வொரு கடும் வேதனையையும் உங்கள் கர்த்தர் தமது பங்கை சுமந்தார்… (Spurgeon, ibid.).

இயேசு எவ்வளவு பொறுமையாக நிற்கிறார் பாருங்கள்,
   இந்தப் பயங்கரமான இடத்தில் நிந்திக்கப்பட்டவராக!
சர்வவல்லவரின் கரங்களை பாவிகள் கட்டினார்கள்,
   சிருஷ்டிகரின் முகத்தில் அவர்கள் துப்பினார்கள்.

III. மூன்றாவதாக, பாவிகளுக்கு மாற்றாக இருக்கும் அவரை பாருங்கள்.

“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).

இயேசு இந்த வேதனைகளையெல்லாம் தமது எந்தச் சொந்த பாவத்துக்காகவும் பாடுபடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவரில் பாவமில்லை.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5).

ஏசாயா 53ல் அவருடைய நொறுக்குதல் மற்றும் காயங்கள், அதேபோல மரணமும்கூட, பாவிகளை இரட்சிக்க அவசியமாக இருந்தது என்று தெளிவாக சொல்லுகிறது. இயேசு நமது பாவங்களை தம்மீது எடுத்துக்கொண்டார். மற்றும் வேதம் சொல்லுகிறது தேவன், “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (II கொரிந்தியர் 5:21). இயேசு பாடுபட்டபோது, அவர் நம்முடைய பாவங்களுக்காக பாடுபட்டார், அவைகளுக்குரிய தண்டனை கிரயத்தை கொடுக்க, அதனால் நாம் இரட்சிக்கப்பட முடியும். பாவம் மிகவும் படுமோசமான காரியமாகும். பாவத்திற்காக வாரினால் அடிக்கப்பட வேண்டும். பாவத்திற்காக துப்பப்பட வேண்டும். பாவத்திற்காக சிலுவையில் அறையப்பட வேண்டும். மற்றும் இயேசு நமது பாவத்தை தம்மீது எடுத்துக் கொண்டபடியினால், அவர் நமது பாவத்திற்காக வாரினால் அடிக்கப்பட வேண்டும். அவர் துப்பப்பட வேண்டும். அவர் வெட்கப்பட வேண்டும். பாவத்தைப்பற்றி தேவன் என்ன நினைக்கிறார் என்று நீ அறிந்து கொள்ள விரும்பினால், அவருடைய குமாரனை பார், முதுகிலே வாரினால் அடிக்கப்பட்டார், அவருடைய தாடை மயிர் பிடுங்கப்பட்டார், போர் சேவகர்களால் அவருடைய முகத்தில் துப்பப்பட்டார் அவர் உனக்காக மற்றும் எனக்காக பாவ நிவாரண பலியாக்கப்பட்டபொழுது. நீயும் நானும் அப்படி வாரினால் அடிக்கப்பட்டால் மற்றும் பிடுங்கப்பட்டால் மற்றும் நமது பாவங்களுக்காக துப்பப்பட்டால் அது ஒரு ஆச்சரியமல்ல. ஆனால் நமது பாவங்களை சுமந்தவர் குமாரனாகிய தேவன். இயேசு நமது ஸ்தானத்தில் நின்றார், மற்றும் “கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது” (ஏசாயா 53:10). நமது பாவங்கள் ஏற்றீடாக மட்டுமே இயேசுவின்மேல் வைக்கப்பட்டாலும், அவர் சிலுவையிலே கிரயம் செலுத்தப்படுவதற்கு முன்பாக அது அவருக்கு அதிக ஆழமான வேதனை மற்றும் வெட்கத்தை கொடுத்தது.

நமது பாடம் சொல்லுகிறதை கவனியுங்கள், “அடிக்கிறவர்களுக்கு என் முதுகை… ஒப்புக்கொடுத்தேன்.” இயேசு அடிக்கிறவர்களுக்கு தாமாகவே விருப்பத்தோடு ஒப்புக்கொடுத்தார், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு, உமிழ்நீருக்கு அவர் முகத்தை ஒப்புக்கொடுத்தார். அவர் சிலுவையின்மேல் மரிக்க தம்மை ஒப்புக்கொடுத்தார். நமது பாவத்திற்காக அவரை யாரும் பாடுபடுத்தவில்லை. அவரே தம்மை விருப்பத்தோடு ஒப்புக்கொடுத்தார். தேவ குமாரன் நமக்காக விருப்பத்தோடு ஒரு சாபமாக மாறினார், நமக்குப் பதிலாக, நமது பாவதண்டனை கிரயத்தை செலுத்த – அதனால் நாம் தேவனால் மன்னிக்கப்பட முடியும் மற்றும் அவருடைய பார்வையில் நீதிமானாக மாற்றப்பட முடியும்.

இதை நீ கேட்டு வியப்பாக உணர முடியவில்லையா? தேவ குமாரன் உனக்காக அடிக்கப்பட்டார், அவருடைய தாடை மயிர் பிடுங்கப்பட்டார், துப்பப்படார், மற்றும் இது ஆச்சரியம், பிரமிப்பு மற்றும் துதியினால் நிரப்பவில்லையா? வானத்தை மேகங்களால் மூடுகிறவர் தமது சொந்த முகத்தை வெட்கத்துக்கும் மற்றும் உமிழ்நீருக்கும் முடிக்கொள்ளவில்லை. மலைகளுக்கு முதுகுகளை உண்டாக்கினவர், தமது சொந்த முதுகை சாட்டையால் அடித்து கிழிக்க விலக்கிக் கொள்ளவில்லை. இந்த பிரபஞ்சத்தை இணைத்துக் கச்சையாக கட்டுகிறவர் சங்கிலியால் கட்டப்பட்டார் மற்றும் தம்மால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதரால் கட்டப்பட்டார். பரலோகத்தில் தூதர்கள் அவருடைய துதியை பெரிய அலைபோன்ற இசையினால் பாடும்பொழுது, அவரை சிலுவையில் ஆணி அடிப்பதுக்காண சாத்தியமாகுமா? அந்த காரணத்தினால்தான் ஆணி வடுக்கள் அவருடைய கைகளிலும் கால்களிலும் எப்பொழுதும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன், அதனால் நாம் அவரை பரலோத்தில் பார்க்கும்பொழுது அவர் நமக்குச் செய்ததை மறக்க முடியாமல் இருக்கும். பாவிகளால் அவருடைய தாடை மயிர் பிடுங்கப்பட்டதை உமிழ்நீர் அவருடைய பரிசுத்த முகத்தில் வழிந்தோடியதை நினைவுகூராமல் அவருடைய அன்பான முகத்தை மகிமையில் எப்படி நான் பார்க்க முடியும்!

இயேசு எவ்வளவு பொறுமையாக நிற்கிறார் பாருங்கள்,
   இந்தப் பயங்கரமான இடத்தில் நிந்திக்கப்பட்டவராக!
சர்வவல்லவரின் கரங்களை பாவிகள் கட்டினார்கள்,
   சிருஷ்டிகரின் முகத்தில் அவர்கள் துப்பினார்கள்.

அவருடைய முகம்! ஏன் தூதர்கள்மேல் துப்பியிருக்க கூடாது? உனக்குத் துப்ப இடமில்லையா ஆனால் அவருடைய அன்பான முகத்தில் துப்பவேண்டுமா? அவருடைய முகம்! தேவன் நமக்கு உதவி செய்கிறார்! அவருடைய முகம்! அவர்கள் இயேசுவுடைய பரிசுத்த முகத்தில் துப்பினார்கள்! ஸ்பர்ஜன் சொன்னார், “அப்படிப்பட்ட கொடுமையான காரியத்தை செய்த மனிதனை ஒருபோதும் சிருஷ்டித்திருக்கக்கூடாது, அல்லது… அவன் வாழாமல் துடைக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் போயிருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்” (ibid., p. 428). தேவன் நமக்கு உதவி செய்கிறார்! அவர்கள் நமது மீட்பருடைய முகத்தில் துப்பினார்கள்!

நீ இழக்கப்பட்டவராக இருந்தால், இப்பொழுது அவரை நம்பு என்று உன்னிடம் கெஞ்சுகிறேன். நீ அவரை நம்பும்போது உன் பாவம் முடிவடையும், ஏனென்றால் அவர் சிலுவையிலே ஆணி அடிக்கப்பட்டபொழுது உன்னுடைய எல்லா அக்கிரமங்கள் மற்றும் வெட்கத்தை சுமந்தார். உனது தண்டனை பிறகு நீக்கப்பட்டது, இயேசு அவை அனைத்தையும் சுமந்து தீர்த்தார் – அவருடைய முதுகில், அவருடைய தாடைகளில், அவருடைய முகத்தில், மற்றும் அவருடைய கைகளிலும் கால்களிலும் ஏற்பட்ட காயங்களால் தீர்த்து விட்டார். அவரை நம்பு உனது பாவங்களுக்குரிய தண்டனைகள் அனைத்தும் நீக்கப்பட்டது, நீ இரட்சிக்கப்பட்டாய், எல்லா காலத்துக்கும் மற்றும் எல்லா நித்தியத்துக்கும் அவருடைய மீட்பின் அன்பினால் நீதிமானாக்கப்பட்டாய்! தயவு செய்து எழுந்து நின்று பாடல் எண் ஆறு பாடுவோம், “Oh, What a Fountain!” by Dr. John R. Rice.

எல்லா அளவையும் கடந்த அன்பின் கதை ஒன்று நமக்கு உண்டு,
   பாவிகள் எப்படி மன்னிக்கப்பட முடியும் என நாங்கள் உரைப்போம்.
இலவசமான மன்னிப்பு, இயேசுவின் பாடுகளால் உண்டு,
   கல்வாரி மரத்தில் பாவநிவாரண பலி செலுத்தப்பட்டது.
ஓ, என்ன ஒரு இரக்கத்தின் ஊற்றுப் புரண்டோடுகிறது,
   சிலுவையிலறையப்பட்ட மனிதர்களின் இரட்சகரிடமிருந்து.
நம்மை மீட்க அவர் சிந்தின இரத்தம் விலையேறப்பெற்றது,
   அதனால் நமது சகலபாவத்துக்கும் மன்னிப்பு மற்றும் கிருபை.
(“Oh, What a Fountain!” by Dr. John R. Rice, 1895-1980).

நீங்கள் இன்று இரவு இயேசுவை நம்ப வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவருடைய இரத்தம் உமது சகலபாவத்தையும் சுத்திகரிக்கும். இப்பொழுது அவரை நம்பு மற்றும் நீ இரட்சிக்கப்படுவாய், எல்லா காலத்துக்கும் மற்றும் எல்லா நித்தியத்துக்கும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள் இல்லையேல் அவரால் உங்களது மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க இயலாது. இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரியப்படுத்துங்கள், ஆனால் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின்னஞ்சல் rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம் ஆனால், முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதவும். கடிதம் எழுதி அனுப்ப விரும்பினால், அவரது விலாசம் Dr. Hymers, P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம் (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை
www.sermonsfortheworld.com
வலைதலம் மூலம் ஒவ்வொரு வாரமும் கேட்கலாம்.
“தமிழ்ப் பிரசங்கங்களுக்கு” இங்கே கிளிக் செய்யவும்.

இந்தப் பிரசங்கங்கள் காப்புரிமை பெறப்பட்டவையல்ல. இதை டாக்டர்
ஹைமர்ஸ் அவர்களின் அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். இருந்தாலும்,
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் எல்லா வீடியோ செய்திகளும், எங்கள்
தேவாலயத்தின் மற்றும் பல வீடியோ செய்திகளும், காப்புரிமை
பெறப்பட்டுள்ளமையால் அனுமதி பெற்றபிறகே பயன்படுத்தவேண்டும்.

பிரசங்கத்துக்கு முன்னதாக வேதப் பகுதியை வாசித்தவர் டாக்டர் க்ரிக்டன் எல். சான்: லூக்கா 18:31-33.
போதனைக்கு முன்னதாகத் தனிப்பாடல் பாடினவர் திரு. பென்ஜமின் கின்கார்டு கிரிப்பித்:
“Lead Me to Calvary” (by Jennie Evelyn Hussey, 1874-1958).


முக்கிய குறிப்புகள்

வாரினால் அடிக்கப்படுதல், வெட்கப்படுத்தப்படுதல் மற்றும் துப்பப்படுதல்

THE SCOURGING, SHAME AND SPITTING

டாக்டர் ஆர். எல். ஹைமெர்ஸ், ஜூனியர் அவர்களால்
by Dr. R. L. Hymers, Jr.

“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசாயா 50:6).

(அப்போஸ்தலர் 8:34; லூக்கா 18:31-33; மாற்கு 15:17-19)

I.   முதலாவதாக, மனித அவதாரமெடுத்த தேவனாக அவரை பாருங்கள்,
ஏசாயா 50:2; யோவான் 1:1, 14; I தீமோத்தேயு 3:16.

II.  இரண்டாவதாக, நமது மாதிரியாக அவரை பாருங்கள், ஏசாயா 53:7;
I பேதுரு 2:21-23; மத்தேயு 26:63; 27:13-14; லூக்கா 6:22-23.

III. மூன்றாவதாக, பாவிகளுக்கு மாற்றாக இருக்கும் அவரை பாருங்கள்,
ஏசாயா 53:5; II கொரிந்தியர் 5:21; ஏசாயா 53:10.